தமிழ் சினிமாவின் மாஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.விஜய் அஜித் ரசிகர்களுக்கிடையே எப்போதும் யார் பெரியவர் என்ற பிரச்சினை சமூக வலைதளங்களில் நடப்பது வழக்கமான ஒன்று . வசுல் முதல் எவ்வளவு நாட்கள் திரையிடப்படுகிறது என அனைத்திற்குமே சமூக வலைதளங்களில் போரேநடக்கும்.
தற்போது மத்திய கட்சி ஒன்று மெர்சல் படத்தில் GST வசனத்தை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றது, மேலும், விஜய்க்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றது.
இதை விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்க்க, அஜித் ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு மெர்சலுக்கு தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அஜித் ரசிகர்கள் “கன்னட நாயே, அடுசுகிட்டாலும் நாங்கதான் அடுச்சுப்போம், குறுக்க எவனையும் விட மாட்டோம்” தமிழன்டா..!” என்ற வசனத்தை தாங்கி நிற்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல் கேஆர்கே எனும் ஒரவர் டிவிட்டரில் அஜித்தை கின்டல் செய்தபோது அஜித் ரசிகர்களுடன் விஜய் ரசிகர்கள் கைகோர்த்தது குறிப்பிடத்தக்கது.