தளபதி விஜய் நடிப்பபில் தீபாவளிக்கு வெளியாகி சாதனை மேல் சாதனையாக படைத்து வரும் படம் மெர்சல். படத்திற்கான ப்ரோமொசனை அவரது ரசிர்களே சமூக வலை தளங்களில் முன்னெடுத்து எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கொடுத்தனர்.
படமும் பல பிரச்சனைகளை சந்தித்து அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்தது. தற்போது வசூல் நிலவரங்களை சேகரிக்கும் பணியில் மும்மூரமாக உள்ள படக்குழுவிற்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.
இதையும் படிங்க: மெர்சல் படத்தால் விஜய் ரசிகர் கைது – பதிலடி கொடுத்த ரசிகர்கள் !
மெர்சல் படத்தின் ஷேர் மட்டும் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ₹ 100 கோடிகள் ஆகும். இதற்கு முன்பு ₹ 100 கோடி ஷேர் கிடைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமான கபாலிக்கு மட்டுமே.
தற்போது இந்த அளப்பரிய சாதனையை படைத்த தளபதி விஜயின் படம் மெர்சல் சாதித்துள்ளதால், வசூல் சக்ரவர்த்தியாக மாறியுள்ளார் விஜய்