தெறிக்குப் பிறகு விஜய்-அட்லீ கூட்டனியில் உருவான இரண்டாவது படம் மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, காஜல் அகர்வால், சமந்தா என ஒரு மெர்சல் பட்டாளமே நடித்த இந்த படம் பல்வேறு தடைகளுக்குப் பின் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
படத்தில் உள்ள பல நல்ல கருத்துருக்கள் மக்களின் மனதை பிரதிபலிப்பதாகவே உள்ளது. படத்தில் வரும் மருத்துவத்துறையின் முறைகேடு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற காட்சிகள் மக்களின் பலத்த கைத்தட்டலைப் பெற்றது.
இதையும் படிங்க: விஜய் படத்தைப் பார்த்த பிறகு நான் அஜித் ரசிகை ஆகிவிட்டேன் – பிரபல நடிகை
தற்போது உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் கிட்டத்தட்ட 200 கோடிகள் வசூல் செய்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் வெளியான இந்த படத்தை பல்வறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இலங்கையின் சமூக மேம்பாட்டுதுறை அமைச்சர் ரஞ்சன் ராமனாயகே. அவர் படத்தினை பார்த்து பாராட்டியுள்ளார். மேலும், இது ஒரு ஆக்சன் கலந்த மசாலா படமாக இருந்தாலும் மக்களுக்கு நற்ச்செய்தியை கூறியுள்ளது. என பாராட்டியுள்ளார் அமைச்சர்.