என்ன இப்படி பண்ணி அது மூலமா வர்ர காச வச்சி தான உங்க அம்மாக்கு சோறு போட்றீங்க – பாலாஜியின் காட்டமான பதிவு.

0
42508
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இருப்பினும் இவருக்கு இந்த சீசனில் இரண்டாம் இடம் கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாஜி தன்னுடைய சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவுகளை போட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் தனது அம்மா குறித்து பதிவிட்டுள்ள பாலாஜி, என் அம்மாவை மிஸ் செய்கிறேன். அன்பார்ந்த யூடுயூப் வாசிகளே என்னை மட்டம் தட்டி அதன் மூலம் வரும் பணத்தை வைத்து உங்க அம்மாவிற்கு உணவளியுங்கள். அதை நான் எப்போதும் செய்ய மாட்டேன். என்னுடைய வலி தான் உங்களுக்கு உணவு என்றால் அந்த வலியை நான் எப்போதும் ஏற்றுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

பிக் பாஸ் ஆரம்பித்த சில நாட்களில் கடந்து வந்த டாஸ்க் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கின் போது பாலாஜி முருகதாஸ் பேசும் போது, தனது தாய், தந்தை இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என்றும், குடித்துவிட்டு அப்பா தன்னை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஒரு குழந்தையைப் பெற்று சரியாக வளர்க்க முடியாதவர்கள் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.கடந்த ஆக்டோபர் 29 ஆம் தேதி நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் பாலாஜி தனது அம்மா மிகவும் அப்பாவி என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement