விஜய் டிவியில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி உள்ளது. அதில் மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றது ‘கலக்கப்போவது யாரு’ என்னும் காமெடி நிகழ்ச்சி. விஜய் டிவியில் வெற்றிகரமாக 7 சீசன்களை கடந்து சென்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளராணா நவீன் , இரண்டாம் திருமணம் செய்விருந்ததால் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ”கலக்கப்போவது யாரு ‘ நிகழ்ச்சின் 5 வது சீசனில் போட்டியாளராக பங்குபெற்றவர் தான் மிமிக்ரி ஆர்டிஸ்ட் நவீன். இந்த சீசனில் தனது பல தரப்பட்ட குரல் திறமையால் பல்வேறு பிரபலங்களின் குரலை மிமிக்ரி செய்து அசத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார். அந்த சீசனில் பட்டத்தை வென்றிடாத போதும் மக்கள் மனதில் நிலைத்து நின்றார் நவீன்
கடந்த சில காலமாக நவீன் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கத்தில் இருந்து வந்தார். அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வது, டப் ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவது என்று இருந்து வந்தார் நவீன். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று (ஜூன் 10 ) திருமணம் செய்து கொளவிருந்த நிலையில், இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டு நவீன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு பின்னணி என்னவெனில் நவீன் ஏற்கனவே திவ்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் அவர் அளித்த புகாரின் பெயரில் தான் இவரை போலீசார் கைது செய்துள்ளனர். நவீன் கடந்த 2016 ஆம் ஆண்டு திவாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்களது திருமணம் சட்டப்படி அரக்கோணம் பதிவு அலுவலகத்தில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவீன் வேறொரு திருமணம் செய்து கொள்ளப்போகும் தகவளை அறிந்த நவீனின் முதல் மனைவி திவ்யா, தனக்கும் நவினுக்கும் திருமணமான ஆவணங்களை காட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த தகவலின் பெயரில் நேற்று சென்னை கிழக்கு காட்கரை சாலையில் நடக்கவிருந்த நவினின் இரண்டாவது திருமணதின் திருமண வரவேற்பை நிறுத்தி அவரை கைது செய்துள்ளது காவல் துறை.