யார் அந்த பிரகாஷ், கடைசி வரை ஏன் அவரை காட்டவே இல்லை – மகிழ் சொன்ன உண்மை

0
185
- Advertisement -

விடாமுயற்சி படம் குறித்து இயக்குநர் மகிழ்திருமேனி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது.

- Advertisement -

விடாமுயற்சி படம்:

அனைவரும் எதிர்பார்த்த அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது.
திரையரங்குகளில் ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விடாமுயற்சி படத்தைக் கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் விடாமுயற்சி படம் தொடர்பாக மகிழ்திருமேனி பேட்டி அளித்து இருக்கிறார்.

மகிழ்திருமேனி பேட்டி:

அதில் அவரிடம் படத்தில் பிரகாஷ் கதாபாத்திரம் எதற்கு வருகிறது? அவருக்கும் படத்திற்கும் என்ன சம்மந்தம்? என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு மகிழ்திருமேனி, படத்தில் பிரகாஷ் என்பது ஒரு இன்சிடென்ட். படம் அவரைப் பற்றியது கிடையாது. அது பார்ப்பவர்களுடைய யூகம். அவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. படத்தில் அவர் இருந்தாலும் இல்லை என்றாலும் கதை நகரும்.
அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

-விளம்பரம்-

படத்தின் கதை:

ஒரு வேலை அவரைப் பற்றி தெரிந்து கொள்ளனும் என்று நினைத்தால் அதுதான் படத்திற்கான ஒரு ஈர்ப்பு. அதேபோல் இந்த படம் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய கதை. ஒரு திருமண பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் உரிமையும் அதிகாரமும் ஒரு பெண்ணுக்கு இருக்கிறது. அவள் வேறு ஒருவருடன் இருந்தால் கூட அவளுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும். அதுதான் நான் இந்த படத்தில் சொல்ல வந்த கருத்து என்று கூறியிருக்கிறார்.

படத்தின் கதை:

மேலும், படத்தில் அர்ஜுன் (அஜித்) , கயல் (திரிஷா) ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கும் கணவர் மனைவியாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் போது இருவரும் ஒரு நாள் ஒரு நீண்ட பயணம் சென்றார்கள். அப்போது இவர்களின் கார் பாலைவனத்திற்கு நடுவே நின்று விடுகிறது. அப்போது ட்ரக்கில் ரக்ஷித் (அர்ஜுன்)வருகிறார். அவர் இருவருக்கும் உதவி செய்ய முன் வருகிறார். இதனால் திரிஷாவை அவரது வாகனத்தில் அஜித் ஏற்றி அனுப்பிவிடுகிறார். தனது மனைவியை அழைத்து சென்ற பின்னர் அவர் அவரின் ட்ராக்கில் திரிஷாவை ரக்ஷித் (அர்ஜுன்) மீண்டும் வந்து தன்னையும் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் திரும்பி வராததால் தனது மனைவியை தேடி செல்கிறார் அர்ஜுன் (அஜித்). அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.

Advertisement