தென்னிந்திய சினிமா உலகில் முன்னனி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார். இவர் 180 படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் நடிக்கும் எல்லா மொழி படங்களுக்கும் இவரே டப்பிங் செய்து பேசுகிறார். நடிகை நித்யா மேனன் அவர்கள் விஜய் , விகர்ம், சூர்யா போன்று பல முன்னனி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார். சினிமா உலகிற்கு வந்த குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் நடிகை நித்யா மேனன். அதோடு விஜய்யின் மெர்சல் படம் மூலம் நடிகை நித்யா மேனன் அவர்கள் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.
தற்போது நடிகை நித்யா மேனன் அவர்கள் பாடகி அவதாரமும் எடுத்து உள்ளார். மேலும், அவரது பாடல்களை விரைவில் வெளியிட இருக்கிறார்கள் என்ற தகவல் வெளி வந்து உள்ளது. இது குறித்து நித்யா மேனன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, எனக்கு சிறு வயதிலிருந்தே பாடுவது மிகவும் பிடிக்கும். அந்த ஆசை இப்போது நிறைவேறுகிறது. எனது முதல் இசைப் பாடல் ஆல்பம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனக்கு நான்கு மொழிகள் தெரியும். கார்ட்டூன் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு ஆசையாக இருக்கிறது. என்னுடைய கனவே சினிமா உலகில் இயக்குனராக வேண்டும் என்பது தான். அதையும் கூடிய விரைவில் நிறைவேற்றுவேன்.
இதையும் பாருங்க : டான்ஸிங் சூப்பர் ஸ்டாரில் இந்த வாரம் வர இருக்கும் புதிய நடுவர் இந்த பிக் பாஸ் பிரபலம் தான்.
சினிமா உலகில் கதாநாயகனை வைத்து தான் படம் எடுக்கிறார்கள். ஒரு சில பேர் மட்டும் தான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த மாதிரி படங்களில் நடிப்பதை விட ஒரு வித்தியாசமான நல்ல கதையில் நடிக்க நான் விரும்புகிறேன். சினிமாவில் 2 ஆடல் பாடல் காட்சிகளில் நடிப்பது தற்போது மலையேறி விட்டது. ரசிகர்கள் தற்போது அதையெல்லாம் விரும்ப மாட்டார்கள். நான் அந்த மாதிரி காட்சி படங்களில் ஒப்புக் கொண்டிருந்தால் என் கணக்கில் நிறைய படங்கள் இருந்திருக்கும். எனக்கு அந்த மாதிரி வாய்ப்புகள் நிறைய வந்தது. ஆனால், எனக்கு அதில் அந்தளவிற்கு ஈடுபாடு இல்லை.
பொதுவாகவே சினிமா உலகில் கதாநாயகிகளுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதாக பேசுகின்றனர். எனது சினிமா வாழ்க்கையில் இது போன்ற சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதனால் எல்லாருக்குமே அந்த மாதிரி நடக்காது என்று நான் சொல்ல வரவில்லை. நாம் எப்படி இருக்கிறோமோ, அதே போல் தான் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம்மிடம் நடந்து கொள்வார்கள் என்று கூறினார்.