கோலாகலமாக நடைபெற்ற நாகசைதன்யா திருமணம் – ஆனந்த கண்ணீர் வடித்த சோபிதா

0
164
- Advertisement -

பிரபல நடிகர் நாக சைதன்யா – சோபிதா திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் நாக சைதன்யா- சோபிதா திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா மகன் ஆவார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இதற்கிடையில் நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா-நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

நாக சைதன்யா- சோபிதா நிச்சயதார்த்தம் :

இவர்களின் விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா அவர்கள் சோபிதாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சோசியல் மீடியாவில் செய்திகள் உலாவி வந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இவர்களின் நிச்சயதார்த்தம் எளிமையாக நாக சைதன்யாவின் வீட்டில் நடந்தது. அதன் பின் சோசியல் மீடியா முழுவதும் இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் வைரலாகி இருந்தது. ஆனால், சமந்தா ரசிகர்கள் சைதன்யாவை விமர்சித்து இருந்தார்கள்.

திருமணம் குறித்த வதந்தி :

அதோடு நாக சைதன்யா – சோபிதா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் வாங்கி இருக்கிறது. அதுவும் 50 கோடி கொடுத்து ஒளிபரப்பு உரிமையை வாங்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் நாக சைதன்யா, திருமணத்தை ஓடிடியில் ஒளிபரப்ப திட்டமிட்டு இருப்பதாக வதந்திகள் வருகிறது. ஆனால், அது எதுவும் உண்மை கிடையாது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் நேற்று, நாகர்ஜுனா குடும்பத்துக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நேற்று இரவு 8: 13 மணிக்கு நாக சைதன்யா- சோபிதா திருமணம் நடைபெற்றுள்ளது.

-விளம்பரம்-

நாக சைதன்யா- சோபிதா திருமணம் :

குறிப்பாக இந்த திருமணம் நாக சைதன்யாவின் தாத்தா அக்கினேனி நாகேஸ்வர ராவின் சிலை முன் நடைபெற்றது. மேலும், இந்த திருமணத்தில் குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். தற்போது இவர்கள் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியா முழுவதும் வைரலாகும் நிலையில் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்‌.

ஆனந்தக் கண்ணீர் வடித்த சோபிதா:

மேலும், திருமணத்தில் சோபிதா துலிபாலாவின் உடல் முழுக்க ஜொலித்த நகைகள் தான் தற்போது ரசிகர்களின் கண்களை பறித்துள்ளது. ஜொலிக்கும் தங்க நிறத்திலான பட்டுப்புடவை மற்றும் உடல் முழுக்க தங்கம் மற்றும் விலை உயர்ந்த நகைகளை அணிந்து கொண்டிருந்த சோபிதா திருமணத்தின் போது ஆனந்தக் கண்ணீர் வடித்திருந்தார். அதோடு இவர்களின் திருமணத்திற்கு நாகார்ஜுனா ரூபாய் 2.5 கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியிருக்கிறார் ‌ மேலும், இவர்கள் இருவரும் வசிக்கும் விதமாக ஹைதராபாத்தில் சொகுசு பங்களா ஒன்றையும் பரிசாக வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement