பிரபல தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் என்ன ஆனார் .! இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார்.!

0
19311
- Advertisement -

ஒருக்காலத்தில் இன்றைய தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்தகண்ணன். இவர் உண்மையில் ஒரு சிங்கப்பூர் தமிழர். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் ஒரு நிகச்ழ்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

-விளம்பரம்-

Anandha-kannan

- Advertisement -

பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்துகொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வைக்கப்பட்ட ஆடிசனில் கலந்துகொண்டு வீ.ஜேவாக தேர்வானார் ஆனந்த கண்ணன்.

இந்த சேனனில் ஜோடிப்பொருத்தம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார் கண்ணன். இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு பெண்கள் வட்டாரத்தில் அதிக வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

Anndha-kannan

anchor anandha kannan

அதன்பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும்.

மேலும், 2012 ஒரு பேன்டஸி 3டி படத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இந்த படத்தின் பெயர் அதிசய உலகம். மேலும், வெங்கட்பிரபுவின் சரோஜா படத்திலும் நடித்தார். அதன்பின்னர் இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்தார் ஆனந்த கண்ணன்.
ithanai_naalai_engirunthai_movie

savaal-singapore show

savaal-singapore

அதன்பின்னர் சரியாக பட வாய்ப்புகள் இல்லாததால், கடந்த 2013ஆம் ஆண்டு சென்னையை விட்டு மீண்டும் சிங்கப்பூருக்கு தன் குடும்பத்துடன் சென்று செட்டில் ஆகிவிட்டார். தற்போது தான் முதன்முதலாக வேலை செய்த வசந்தம் டீவியில் மீண்டும் சேர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் ஆனந்த கண்ணன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

Advertisement