நடிகையிடம் கூட்டத்தில் மோசமாக நடந்த 15 வயது சிறுவன்..! நடிகை செய்த செயல்

By Ajju · 22/5/2018
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு வெளியில் சென்றாலே சில பிரச்சனைகள் எதிர்கொள்கிறார்கள் என்று ஒரு சில நடிகைகள் அவர்களாகவே முன்வந்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகைகள் சினிமா துறைகளில் பாலியல் தொல்லைகளுக்கு தாங்கள் ஆளாகியுள்ளதாக பலர் தெரிவித்துவாங்கிண்டனர். பொதுவாக நடிகைகளிடம் சில்மிஷங்களில் ஈடுபடும் நபர்கள் ஒன்று வாலிபர்களாகவோ இல்லை வயதில் முதிவர்களாகவோ தான் இருப்பார்கள். ஆனால் "தான் ஒரு 15 வயது பையானால் சில்மிசத்திற்கு உள்ளாகியுள்ளேன்" என்று பிரபல பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகை சுஸ்மிதா சென். 20 ஆண்டு காலமாக ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார். மேலும் இவர் 1997 ஆம் ஆண்டு "ரட்சகன்" என்ற ஒரு தமிழ் படத்திலும் நடித்துள்ளார். 42 வயதாகும் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுஸ்மிதா "ஆறு மதத்திற்கு முன்னர் நான் ஒரு பொது விழாவிற்கு சென்றிருந்தேன், அப்போது கூட்ட நெரிசலில் சிக்கிய போது யாரோ என்னிடம் தவராக நடந்து கொண்டார். பின்னர் அந்த நபரின் கையை பிடித்து எழுத்து பார்த்ததும் நான் மிகவும் அதிர்ச்சியடைந்ததேன். காரணம் அது ஒரு 15 வயது கொண்ட ஒரு சின்ன பையன் " என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்த பின்னும் அந்த பையனை தனியாக அழைத்து விசாரித்தாராம் சுஸ்மிதா. பின்னர் அந்த பையனின் மீது புகார் அளித்தால் அவரது வாழ்க்கை வீணாகி விடும் என்று கருதி, அவருக்கு அறிவுரை குறி அனுப்பியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full