
‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, நடிகர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து பேசியுள்ளார். சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபோது விஜய் தொலைபேசியில் அழைத்து நன்றி கூறியதாகவும், விஜய் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் என்பதால் அவரது அழைப்பு தனக்கு எதிர்பாராததாக இருந்ததாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
வேகமான வாசிப்பு. அவசரச் செய்திக்கு அறிவிப்பு. இணையம் இல்லாமலும் இயங்கும்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளை நேரில் பார்த்த நடிகர் சோனு சூட், அந்நாட்டு மக்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சேதமடைந்த வீடுகள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மாறிப்போன வாழ்க்கையை சுட்டிக்காட்டிய அவர், “நேபாளம் தனித்து இல்லை; அதன் மக்களுடன் நான் துணை நிற்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. இதன் மூலம் லைசென்ஸ் பெறுவதற்கான காத்திருப்பு காலம் குறைவதுடன், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு தொடர்பான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் எளிதாக அணுக முடியும். பொதுமக்களின் நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்தும் வகையில் இந்த டிஜிட்டல் மாற்றம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணையை பார்வையிட்டு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. பொதுமக்களை சந்தித்து கையசைத்து வரவேற்பு தெரிவித்த விஜய், அணையின் அருகே நடைபெற்ற நிகழ்விலும் பங்கேற்றார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘சண்டைக்கோழி’ படத்தின் கதையை முதலில் நடிகர் விஜய்யிடம் இயக்குநர் லிங்குசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கிரண் கதாபாத்திரம் மிகவும் முக்கியமாக இருப்பதாகவும், அதைத் தாண்டி ஹீரோவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றும் கருதி விஜய் அந்தக் கதையை மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் விஷால் நடிப்பில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தன்னை பாராட்டியதாகவும் இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

“மண்டாடி” இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி, படத்திற்காக தான் எதிர்கொண்ட கடினமான அனுபவங்கள் குறித்து உருக்கமாக பேசினார். குறிப்பாக இரண்டு மாதங்கள் கடலில் நடைபெற்ற படப்பிடிப்பு, தனது சினிமா பயணம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் அளித்த வாய்ப்பு குறித்து அவர் பகிர்ந்த கருத்துகள் கவனம் பெற்றன. பா.விஜய்யின் பேச்சால் சூரி கண்ணீர் விட்ட நெகிழ்ச்சியான தருணமும் விழாவில் இடம்பெற்றது.

சிக்மா போட்டோ இந்தியா மற்றும் பி.பி. போட்டோகிராபி இணைந்து “Frames of Belonging: Photography, Community & Connection” என்ற தலைப்பில் உலக புகைப்பட தினத்தை கொண்டாடினர். புகைப்படக் கலை, சமூக ஊடக அல்காரிதம், AI, படைப்பாற்றல் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கான சமூகத்தை உருவாக்குதல் குறித்து நிகழ்ச்சியில் கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour தொடரில் இந்தியாவின் இளம் செஸ் நட்சத்திரம் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தார். இறுதிப் போட்டியில் ஃபேபியானோவிடம் ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த அவர், சிறப்பான கம்பேக் கொடுத்து 15-13 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, நடிகர் விஜய்யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானால் அதற்கு “நெஞ்சில் குடியிருக்கும்” என தலைப்பு வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் முதல் பாதியில் விஜய்யின் திரையுலகப் பயணம் மற்றும் சாதனைகளையும், இரண்டாம் பாதியில் அவரது அரசியல் பயணத்தையும் மையமாகக் கொண்டிருக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது சாதனை இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மாறுவதில் உள்ள தொழில்நுட்பம் மற்றும் மனநிலை சார்ந்த சவால்களை விளக்கிய இஷான் கிஷன், டெஸ்ட் கிரிக்கெட்டின் தனிச்சிறப்பு, தனது ஆட்டமிழப்பு மற்றும் அடுத்த போட்டிக்கான அணியின் அணுகுமுறை குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏகனாபுரம் பகுதி விவசாயிகள், தங்களது போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நினைவுகூரும் வகையில், ஏகனாபுரம் பிரதான சாலைக்கு ‘ச.ஜோசப் விஜய் சாலை’ என பெயரிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK தலைவர் விஜயின் அரசியல் பயணம் குறித்து பேசிய சௌந்தரராஜா, நாடாளுமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறக்கும் என்றும், அதற்கான விதை ஏற்கனவே விதைக்கப்பட்டுவிட்டதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், வடமாநிலங்களைச் சேர்ந்த மக்களும் விஜயை எதிர்கால பிரதமர் என அழைக்கத் தொடங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவை கௌரவிக்கும் வகையில், தேனி மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். அவரது திரைப்பணியை நினைவுகூரும் வகையில் உருவாகும் இந்த மணிமண்டபம், ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் ஜோய் ஆலுக்கஸ் நிறுவனம் இணைந்து, சமூக சேவை நோக்கில் ஒரு பைசாவுக்கு தங்க மோதிரம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

மலேசியாவில் PhD ஆய்வு மேற்கொண்டு வரும் தமிழக மாணவர் பாரதிதாசனின் கல்வி உதவித்தொகை விவகாரம் தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார். தேவையான நடைமுறைகள் முடிந்ததும் மாணவருக்கான நிலுவைத் தொகை இரண்டு நாட்களில் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மாணவரின் குற்றச்சாட்டுகள், அரசு தரப்பு விளக்கம் மற்றும் இந்த விவகாரத்தில் எழுந்த அரசியல் சர்ச்சை குறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டப்பேரவையில் ED அளித்த கடிதம் தொடர்பாக அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரையும் காப்பாற்றும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதையும், அதன் மூலம் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். காற்று, நீர், மண் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை கட்டுப்படுத்தி, இயற்கை வளங்களையும் மக்கள் நலனையும் பாதுகாக்கும் வகையிலான நிலையான வளர்ச்சி அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், திமுக ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சர்க்காரியா கமிஷன் மற்றும் ED ஆவணங்களை மேற்கோள் காட்டினார். இதனால் பேரவையில் அமளி ஏற்பட்டு திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வைரலான வீடியோ முதல் வனத்துறை விசாரணை வரை: அரிய குரங்கின் பின்னணி குறித்து எழும் முக்கிய கேள்விகள்.

கடந்த கால காதல் உறவில் இரண்டு ஆண்டுகள் மன ரீதியான கொடுமையை சந்தித்ததாக அனுபாமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்த உறவு தன்னை மனதளவிலும் உடலளவிலும் பாதித்ததாகவும், அதிலிருந்து மீண்ட பிறகே இதைப் பற்றி பேசியதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் உச்சரிப்பு தொடர்பான சர்ச்சைக்கு விளக்கம் அளித்த நிதியமைச்சர் மரிய வில்சன், தனக்கு மொழிப் பிரச்சினை இருப்பதை மறுக்கவில்லை என்றும், அன்று சற்று ஆவேசப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேநேரத்தில், கடந்த ஆட்சியின் அரசுத் துறைகளின் வரவு-செலவு குறித்து ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட அறிக்கை முதல்வரிடம் இருப்

தமிழக சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம்: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதரவு!

தெலங்கானா முதல்வரின் கருத்து குறித்துத் தெரியாமல் தயாநிதி மாறன் பேசுவது அரசியல் தர்மம் அல்ல என்றும், குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்றும் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நற்பணி மன்றத்தைப் பலப்படுத்தும் தனுஷ்! - வேகமெடுக்கிறதா தனுஷின் அரசியல் நகர்வு?

சட்டப்பேரவையில் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்து எம்.எல்.ஏ ராஜேந்திரன் பேசியதைத் தொடர்ந்து காரசார விவாதம். “நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது” என அமைச்சர் பதில்.

தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!