கடந்த சில காலமாக தமிழகத்தில் பல்வேறு பாலியல் சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. 61 வயதான மலையாள நடிகை 37 வயதான சியா என்ற நபர் மீது கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.

எர்ணாகுளத்தில் வசித்து வருபவர் நடிகை சியா, இவர் நடிகையை தொலைபேசியில் தொடர்புகொள்வார் என்றும் பின்னர் பிரீமியம் ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் சியா அடிக்கடி அந்த நடிகையை அச்சுறுத்ததியும் பாலியல் ரீதியாக பல துன்புறுத்தினார் என்றும் அந்த நடிகை புகார் அளித்துள்ளார்.

Advertisement

அவர் அளித்துள்ள அந்த புகாரில், தொட்டபள்ளியில் ஒரு ஹோட்டல் அறையில் சியா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நியாஸ் தெரிவித்ததோடு, கயம்குளத்தில் அவரது வீட்டிற்கு வந்தபிறகு தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும். அதனை வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை , தனது கணவர், அண்டை மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோ கேரளா முழுவதும் வைரலாக பரவி வந்த நிலையில் அந்த விடியோவை கண்ட பலரும் அந்த வீடியோவில் நடிகை நியாஸ் விருப்பத்துடன் தான் பாலியல் உறவில் ஈடுபட்டது போல தெரிகிறது. எனவே, சியா மீது பாலியல் குற்றத்திற்காக அல்லாமல் பாலியல் விடியோவை பகிர்ந்ததற்காக மட்டும் வழக்கு தொடர வேண்டும் என்று கூறிவருகின்றனர். மேலும், பொய்யான குற்றசாட்டை சுமத்தியதற்காக நடிகை நிவாஸை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

Advertisement
Advertisement