7 வயது சிறுமியின் உயிரை பலி வாங்கிய தமிழ் சீரியல் ! பெற்றோர்களே ஜாக்கிரதை

By Ajju · 3/12/2017
சமீபகாலமாக பெரிய திரையில் வரும் திரைப்படங்களின் பாதிப்பை விட ட்வீக்களில் ஒலிபரப்பப்படும் சீரியலின் தாக்கம் மக்களிடையே அதிகமாக உள்ளது. தினமும் இரவு தொடர்ந்து அடுத்தடுத்து பார்க்கும் சீரியலால் மக்கள் தங்களையும் மறந்து சீரியல் கேரக்டருக்குள் சென்று விடுகின்றனர். அது போல தான் தற்போது அந்த சீரியலின் தாக்கம் இரு குழந்தையைன் உயிரை வாங்கியுள்ளது. பல வருடங்களுக்கு முன்னர் சக்தி மான் என்ற சீரியலால் ஒரு சிறுவன் மாடியில் இருந்து குதித்து உயிரை விட்டது நியாபகம் இருக்கும். கர்நாடக மாநிலத்தின் பிராதனா என்ற சிறுமி ஒரு குறிப்பிட்ட தமிழ் சீரியலில் டப்பிங் தொகுப்பை தொடர்ந்து ஒரு வாரம் பார்த்து வந்துள்ளார். இந்த சீரியலில் ஒரு பெண் தீயில் நடனமாடியுள்ளார். இதனை மனதில் வைத்துக்கொண்ட பிராதனா வீட்டில் யாரும் இல்லாத வேளையில் அதே போன்று தீ பற்ற வைத்து அதில் ஆகியுள்ளார். இதனால் உடம்பில் தீ பற்றி எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார் பிராதனா. சீரியலுக்கு சென்சார் இல்லாததால் பல சமயத்தில் தேவை இல்லாத பலவற்றை இக்காலத்தில் காட்டுவது இது போன்ற ஆபத்துக்களை அழைத்துச் செல்லும் இதனை பெற்றோர்கள் கவனத்துடன் கையாண்டு பாதுகாப்பாக தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும்.
behindtalkies AMP · Quick view
View full