இளையராஜாவை உதாரணம் காட்டி ஜாதி குறித்து பேசிய ரகுமான்.! என்னனு பாருங்க.!

By ·

தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவானாக விளங்கிவருபவர்
இசையமைப்பாளர் இளையராஜாவை இன்று பிப்.2 மற்றும் 3ம் தேதிகளில் அவரை கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளையராஜாவிற்கு அடுத்தபடியாக கொண்டாடபடுவது இசைபுயல் ஏ ஆர் ரஹ்மான் தான். இவர் சர்வம் தாளமயம் படத்திற்காக ஒரு யு-டியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர், இளையராஜாவை பற்றி பேசியதாவது.

இதையும் படியுங்க : இத பண்ணிட்டு அப்புறம் பாட வாங்க.! அட்வைஸ் செய்த ஏ ஆர் ரகுமான்.! சரி தான்.

ஒருவரின் ஜாதி, மதம் வைத்து எப்போதும் அவர்களை ஒதுக்க கூடாது. ஒதுக்கினாலும் நீ ஒடுங்கிவிடக்கூடாது.எனக்கு இந்த விஷயத்தில் இன்ஸ்பிரேஷனே இளையராஜா சார் தான், அவர் எங்கிருந்து வாழ்க்கையை தொடங்கி இன்று அவர் தொட்டு இருக்கும் உயரமே ஒரு சான்று.

ஜாதியால் ஒருவரை அமுக்கினால் நீ மீண்டும் முன்னேறி வர வேண்டும் என்ன அதற்கு ஒரு சில வருடங்கள் ஆகும். போராடி வெற்றிபெற்றுவிட்டால் பின்னர் அதை பற்றியெல்லாம் யாரும் பேச மாட்டார்கள் என்று பேசியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full