மருத்துவ முத்தம் குறித்து மனம் திறந்த ஆரவ்

By Tamil Selvam · 4/10/2017
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது புகழின் உச்சியில் இருக்க, அந்த போட்டியின் வெற்றியாளருடைய நிலையை பற்றி சொல்லவே தேவை இல்லை. தற்போதுள்ள சூழலில் ஆரவ் என்றால் அறியாதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். இந்த நிலையில் அவர் பிக் பாசில் நடந்த பல சம்பவங்கள் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஓவியா இடையில் இருந்த நட்பை பற்றி நாம் அறிந்ததே. ஓவியாவிற்கு நீங்கள் மருத்துவ முத்தம் கொடுத்தது எதற்காக என்ற கேள்விக்கு. நாம் ஒரு நல்ல எண்ணத்தில் தான் அந்த முத்தத்தை கொடுத்தேன். அதனால் ஓவியாவிற்குள் இருந்த காதல் நட்பாக மாறும் என்ற எண்ணத்தில் தான் நான் அதை செய்தேன். எனக்கும் ஓவியாவிற்கு இடையில் இருந்து நட்பு மட்டுமே. 100 வது நாளில் ஓவியாவை சந்தித்தது சந்தோஷம். நானே அவரிடம் பேச வேண்டும் என்று இருந்தேன் ஆனால் அவரே என்னிடம் வந்து பேசினார். அந்த நிகழ்ச்சி எனக்கு நிறைய அனுவபங்களை கற்று தந்தது என கூறியுள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் பார்த்த அனைத்துமே ஸ்கிரிப்ட் கிடையாது. அணைத்து நிகழ்வுகளும் உண்மையே என்று அவர் தெளிவாக கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full