வாழ்க்கையே வெறுத்துப் போய் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்று நடிகர் அப்பாஸ் அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்துள்ளனர். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் இருந்த நடிகர்கள் தான். அந்த வகையில் நடிகர் அப்பாஸும் ஒருவர். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.

இவர் 1996ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. இவர் சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். இவர் தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார். அப்போது தான் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார். முதல் படத்தின் புதுமுக தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள்.

Advertisement

அப்பாஸ் திரைப்பயணம்:

அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார் அப்பாஸ். இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது. அதன் பின்னரும் சினிமா, டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் அப்பாஸ் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார்.

அப்பாஸ் தற்போதைய நிலை:

அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் இவர் கடந்த இப்படி ஆண்டு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒரு சினிமா கலைஞருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பின்னணியில் உள்ள காரணத்தை அவர்கள் காணவில்லை. ஆனால் நியூசிலாந்தில், அப்படியான விஷயங்கள் கிடையாது. . நியூசிலாந்திற்கு வந்த பிறகு நான் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்தேன். பின் மெக்கானிக்காக வேலை செய்தேன். கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன். அதற்கிடையில், நான் ஆஸ்திரேலியா சென்று ஒரு பொது பேச்சாளராக சான்றிதழ் பெற்றேன்.

Advertisement

அப்பாஸ் அளித்த பேட்டி:

தற்கொலை எண்ணம் கொண்ட இளைஞர்களிடம் தான் நான் உரையாடுவேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.அதன் பின் அப்பாஸ் உடைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டு கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு அப்பாஸ் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், நான் என்னுடைய பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்தேன். இதனால் எனக்கு வாழ்க்கையே பிடிக்கவில்லை .

Advertisement

தற்கொலை செய்ய காரணம்:

அது மட்டும் இல்லாமல் அந்த சமயத்தில் என்னுடைய காதலியும் என்னை விட்டு பிரிந்து விட்டார். இதனால் நான் தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன். உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்து நடுரோட்டில் ஓடும் லாரி முன் நின்றேன். ஆனால், வர வண்டியில் விழுந்து அவருக்கும் பிரச்சனை வரும் என்று நகர்ந்துவிட்டேன் என்று வேடிக்கையாக கூறியிருந்தார். இப்படி அப்பாஸ் அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலரும் நகைச்சுவையாக கமெண்ட் போட்டு வருகிறார்கள்.next அண்ணா

Advertisement