தீரன் படம் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக நேர்மையான போலீஸ் அதிகாரிக்களுக்கான படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் பல போலீஸ் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். இதில் போலீசாக நடித்த கார்த்தியை அடுத்து, படத்தில் அனைத்தையும் கவர்ந்தவர் வில்லனாக நடித்த அபிமன்யூ சிங் தான். இதனால் இவரும் தனது நடிப்பிற்காக பாரட்டுகளை பெற்று வருகிறார்.

இதனால் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இவர் கூறியதாவது,
படம் ஹிட் ஆனது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக் கூறினார். மேலும், தல அஜித் குமாரைப் பறியும் பேசினார்.

Advertisement

அஜித் நடிப்பில் புலி, அதிரடியாக அற்புதமாக நடிப்பவர் அஜித். அவரது நடிப்பு எனக்கு பிடிக்கும். அவரது படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அது பெரும் எனக்கு பாக்கியமாகும் எனக் கூறினார் அபிமன்யு சிங்.
சிவா இயக்கவுள்ள விஸ்வாசம் படத்திற்கு இன்னும் வில்லன் தேர்ந்தெடுக்காத நேரத்தில் இப்படி கூறியுள்ளார் அபிமன்யூ. இதனால், இப்படத்திற்கு அவர் வில்லனாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement