தமிழில் `பட்டதாரி’ படத்தின் மூலம் ஹீரோயினாகஅறிமுகமான அதிதி மேனன் கடந்த 18ம் தேதி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிடமிருந்து மிரட்டல் வருவதாகத் தெரிவித்தார். 

மேலும், ‘பட்டதாரி’ படத்தில் அவருடன் நடித்த போது நட்பாகி பிறகு அதுக் காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவை அனைத்தும் உண்மையில்லை. என்னைத் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார்.

Advertisement

ஆனால், அபி சரவணனோ ,நானும் அவரும் கடந்த 3 வருடங்களாகக் கணவன், மனைவியாக வாழ்ந்து வருகிறோம். எங்கள் இருவருக்கும் திருமணம் ஆனதற்கான மேலும் சில ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருந்த நிலையில் அபி மற்றும் அதிதி ஒரு தனி அறையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்ட வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் சரவணன்.

Advertisement