அபிராமிக்கு செய்த பாவத்துக்கு கருட புராணத்தில் இதுதான் தண்டனை..!

By Ajju · 18/9/2018
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் முழுவதும் அபிராமி பற்றிய செய்திகள் தான் மிகவும் வைரலாக பரவி வந்தது. பெற்ற தாயே கள்ளக்காதலுக்காக இரண்டு குழைந்தைகளை கொடுரமாக கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரட்டை கொலை செய்த அபிராமிக்கு, அதற்கு உடந்தையாக இருந்த கள்ள காதலர் சுந்தரத்திற்கும் சட்ட ரீதியாக என்ன தண்டனை கிடைக்கும் என்று பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அபிராமிக்கு கருட புராணத்தின்படி அவருக்கு மேலோகத்தில் என்ன தண்டனை கிடைக்கும் என்று சாஸ்திர நிபுணர் ஒருவர் விக்கமளித்துள்ளார். இதுகுறித்து ஒரு சாஸ்திர நிபுணர் கூறுகையில், நாம் செய்யும் நன்மை தீமை பொறுத்து மேலோகத்தில் கருடபுராணத்தின்படி தண்டனைகள் வழங்கபடுகிறது. கலியுலத்தில் சில ஆர்ப்ப பாவங்களுக்கான தண்டனை மிக கடுமையாக வகுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கணவனுக்கு துரோகம் செய்யும் பெண், வேறு ஆணை கட்டித்தழுவினாலோ, இல்லை ஒரு ஆண் பிறர் மனைவியை கட்டித்தழுவினாலோ அது தர்மத்திற்கு மீறிய செயல். இதுபோன்ற தவறுகள் செய்பவர்களுக்கு நரக லோகத்தில் ஒரு வாயில் இருக்கிறது. அங்கு நினைதுக் கூட பார்க்கமுடியாத அளவிற்கு தண்டனைகள் வழங்கபடுகிறது. பபிறர் மனைவியை நோக்குபார்களுக்கு நர லோகத்தில் ஒரு இரும்பு பெண் பொம்மையை செய்து அதற்கு நெருப்பு வைத்து அதனை கட்டிப்பிடிக்க வைப்பார்கள். அதே போல கணவனுக்கு துரோகம் செய்த பெண்ணிற்கு ஒரு ஆண் பொம்மை தீயிட்டு கொளுத்தி அதனை கட்டிப்பிடிக்க வேண்டும் என்ற கொடுமையான தண்டனை இவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full