விஜயை போல் ஏன் தான் அரசியலுக்கு வரவில்லை என்பதற்கு அஜித் சொன்ன பதில் !

By Ajju · 31/10/2017
தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகர்களில் தல அஜித் குமாரும் ஒருவர். அவருக்கு தமிழகத்தில் ரசிகர் பட்டாளம் அதிகம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ரஜினி, கமல், விஜய் என பல பிரபலமான மக்கள் செல்வாக்கு கொண்ட நடிகர்கள் அனைவரும் அரசியலுக்கு அடி போட்டுள்ள நிலையில், அஜித்தின் ரசிகர்களும் அவரை அரசியலுக்கு வரவைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக வெளியிலும், ஊடகத்திலும் தலை காட்டுவதில்லை அஜித். ஆனால், இது போன்ற பிரச்சனைகள் வரும் என்று தான் பல வருடங்களுக்கு முன்னரே தன் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார் மனிதர். இதையும் படிங்க: சென்னை பாக்ஸ் ஆபீஸ் – விவேகத்தை பின்னுக்குத் தள்ளியது மெர்சல் சமீபத்தில், ரசிகர்கள் அவரை அனுகி அரசியலுக்கு வருவது குறித்து கேட்டபோது, "அரசியல் எல்லாம் எனக்கு ஒத்து வராது, அது எனக்கு தெரியாத ஒன்று. ஆகவே வற்புருத்தாதீர்கள்"என கூறியுள்ளார் அஜித் தங்களுக்கு திரையில் கிடைத்த பிரபலத்தை வைத்து வந்த ரசிகர்களை வைத்து அரசியலுக்கு வர முயற்ச்சிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், எனக்கு தெரிந்ததை நான் செய்கிறேன், ரசிகர்களை வைத்து செய்யும் அரசியல் நியாமற்றது என ரசிகர் மன்றத்தை கலாய்த்த அஜித் குமார் உன்னதமானவராக அவரது ரசிகர்களால் பார்க்கப்படுகிறார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full