மிருகம், ஈரம் போன்ற படங்களின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் ஆதி. இவர் தற்போது தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளாக சதீஷ் என்பவர் பி.ஏ வாக இருந்து வந்தார்.
நேற்று சதீஷ் ஒரு பெரிய வாகனவிபத்தில் சிக்கி தனது இன்னுயிரை இழந்தார். இதனால் ஆழ்ந்த துயரத்திற்கு சென்ற நடிகர் ஆதி தனது பேஸ்புக் பக்கத்தில் சதீஷ், ஆன்மா சாந்தியடைய பிராத்திப்பதாக பதிவு செய்துள்ளார்.
மேலும், தன் தம்பி போல இருந்த சதீஷ் தன்னைவிட்டு பிரிந்துவிட்டதாகவும் தனது வாழ்க்கை முழுவதும் தன் தம்பியை மிஸ் செய்வதாக பதிவு செய்துள்ளார் ஆதி.
பலருக்கும் நெருக்கமான ஒரு நண்பராக அறிந்த சதீசின் இழப்பினை தாங்க முடியாத பல நடிகர் நடிகைகள் அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.