தமிழ் சினிமாவின் ஜாம்பவான் காமெடி நடிகர் நாகேஸின் மகன் தான் ஆனந்தபாபு. இவரது குடும்பம் சினிமாவில் பெயர் பெற்ற குடும்பம். இதனால் துவக்கத்திலேயே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார் ஆனந்த பாபு.
சிறு வயதிலேயே நல்ல டான்சர் இவர். இருந்தும், தனது நடிப்புத் திறமையால் 1986ஆம் ஆண்டு வெளிவந்த தங்கைக்கோர் கீதம் என்ற மெகா ஹிட் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் 1999வரை நன்றாக அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்தார். சேரன் பாண்டியன் என்ற படம் இவர் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

ஆனால் வளர்ச்சி அதிகமாக அதிகமாக அவருடன் கெட்ட குடிப்பழக்கம் உள் புகுந்து அவரது குடியை மொத்தமாக கெடுத்தது. 1986ஆம் ஆண்டு முதல் வந்த திருமண பந்தம் 2013ல் விவாகரத்தில் முடிந்தது. இவருக்கு இருந்த 4 மகன் மகள்களும் இவரை கவனித்துகொள்வதில்லை.
2005ஆம் ஆண்டு உயிர் போகும் நிலையில் மருத்துவமனையில் சேர்த்து அவரை காப்பற்றி விட்டு தற்போது அவரது குடிப்பழக்கத்தால் அப்படியே விட்டனர். தற்போது அந்த குடிப்பழக்கத்தில் இருந்து மீள மெதுவாக முயற்சி செய்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகள் இவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

Advertisement

தற்போது, விஜய் டீவியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். அதனுடன் சேர்த்து சில படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரதிலும் நடித்து வருகிறார்.

Advertisement