தமிழ் சினிமா உலகில் வில்லன் கதாபாத்திரத்தில் கை தேர்ந்தவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். 1998 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற தமிழ் படத்தின் மூலம் தான் ஆனந்தராஜ் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தில் ஆனந்தராஜ் நடித்து இருந்தார்.

தளபதி விஜயின் பிகில் படம் தீபாவளியன்று மிக பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனை படைத்தது என்று சொல்லலாம். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், இவர்களுடன் படத்தில் விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இதையும் பாருங்க : எனக்கு பெண் குழந்தை பிறந்தால் உன்ன மாதிரி இருக்கனும். காதலை உறுதி செய்தாரா பிரியா பவானி ஷங்கர் ?

Advertisement

இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹுமானின் இசையில் பாடல்கள் எல்லாம் சும்மா வெறித்தனம். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. இந்நிலையில் நடிகர் ஆனந்த் ராஜ் அவர்கள் இந்த படத்திற்கு பெரிய அளவிலான கால்ஷீட் கொடுத்து இருந்தாராம். ஆனால், படத்தில் அவருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

வீடியோவில் 23:30 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

படத்தில் அவருடைய காட்சிகள் எல்லாம் நீக்கி விட்டு தான் திரையரங்கில் வெளியிட்டார்களாம். அதுமட்டும் இல்லாமல் பிகில் படத்தில் நடிகர் ஆனந்த் ராஜ் அவர்கள் என்ன வசனம் பேசினார்? படத்தில் அவர் உள்ளாரா? என்று பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள். இது குறித்து நடிகர் ஆனந்த் ராஜ் அவர்களிடம் கேட்ட போது அவர் கூறியது, நான் பிகில் படத்தில் பல காட்சிகளில் நடித்து இருந்தேன். நான் நடித்த பல காட்சிகளை நீக்கி வெளியிட்டு உள்ளார்கள். ஆனால், இவர்கள் இந்த அளவிற்கு செய்வார்கள் என்று எனக்கு தெரியாது.

Advertisement

இதனால் நான் மிகவும் மனம் உடைந்து போனேன். அதோடு எனக்கு இவர்களின் செயல் வலிக்கின்றது. இதனால் தான் இன்று வரை நான் பிகில் படத்தை பார்க்கவில்லை என்று பேட்டியில் தெரிவித்து உள்ளார் ஆனந்த் ராஜ். தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய திறமை வாய்ந்த நடிகர் ஆனந்த் ராஜ். இவரை பிகில் படத்தில் சரியாக பயன்படுத்தவில்லை என்று பட ரிலீசின் போது பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. தற்போது இவர் பேட்டி அளித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

Advertisement
Advertisement