தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஜெய்யும் ஒருவர். இவர் 2002 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி படத்தில் குணா என்ற தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்திற்கு பிறகு இவர் சென்னை 600028, சரோஜா, வாமனன், கோவா, நவீன சரஸ்வதி சபதம், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, வாலு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதில் அவர் பேசியது, பகவதி படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். ஆனால், அதற்கு பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இதுவரை நான் அவரிடம் 150 தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்.

Advertisement

ஆனால், அவர் நீதான் ஹீரோ ஆகி விட்டாய் அதற்கு அப்புறம் ஏன் என்று சொல்லி விட்டார். பலரும் என்னிடம் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். சிம்பு திருமணத்திற்கு பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புவிற்கு அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்று நான் நினைக்கிறேன் என பதிலளித்துள்ளார்.

தற்போது நடிகர் ஜெய் அவர்கள் பிரேக்கிங் நியூஸ், பார்ட்டி, எண்ணித் துணிக, சிவ சிவா, குற்றமே குற்றம் போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர சில புதிய படங்களிலும் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஜெய் ஒரு புதிய படத்தில் சுந்தர் சிக்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Advertisement
Advertisement