என்னது இவர் நடிகர் ஜெய் ஷங்கர் மகனா..! என்ன வேலை செய்கிறார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே !

By Ajju · 25/4/2018
தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கபட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். எம் ஜி ஆர் சிவாஜி இருந்தகாலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்துக்கொண்டு வெற்றிகரமாக தமியல் சினிமாவில் வலம் வந்தவர். 1965- இல் தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஜெய் ஷங்கர் தமிழில் பலகவ் பாய் வேடங்களில் நடித்துள்ளார். அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் தான். சினிமா நடிகரான இவர் அந்த காலத்திலேயே பல சமூக நலதிட்ட உதவிகளை செய்துள்ளார். மேலும் பல ஏழை மக்களுக்கு எந்த ஒரு பிரதிபலனும் இல்லாமல் பல உதவிகளை செய்துள்ளார். பின்னர் ௨௦௦௦ ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். நடிகர் ஜெய் ஷங்கருக்கு விஜய் ஷங்கர் என்னும் மகனும் இருக்கிறார். மருத்துவராணா இவர் தனது தந்தையயை போன்றே பல நல்ல உதிவிகளை மக்களுக்காக செய்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தந்தையின் பிறந்தநாள் அன்று 15 இலவச கண் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார். மேலும் விரைவில் தனது தந்தை பெயரில் நினைவு மருத்துவமனை ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சமீபத்தில் பேட்டியளித்துள்ள விஜய் ஷங்கர் தனது அப்பா போன்றே தாமும் தனது மருத்துவமனை மூலமாக பல நல்ல உதிவிகளை ஏழை மக்களுக்கு செய்வேன் என்று தெரிவித்துள்ளார் . இதனால் இவரின் நல்ல குணத்தை கண்டு அனைவரும் இவரை பாராட்டி வருகின்றனர்
Tamil Behind Talkies AMP · Quick view
View full