தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ஒருவரை சொகுசு விடுதி ஊழியர்கள் சிறை பிடித்த சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து மிக பிரபலமானவர் நடிகர் ஜெயராம். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. இவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம். இவர் மலையாள படங்களில் நடித்து உள்ளார்.

மேலும், தமிழில் மீன் குழம்பும் மண் பானையும், ஒரு பக்க கதை என சில படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது இவர் வெப்சீரிஸ் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு காளிதாஸ் சென்றிருந்தார். அங்கு படக்குழுவுடன் காளிதாஸ் அவர்கள் ஒரு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார்.

Advertisement

மேலும், அவர்கள் தங்கி இருக்கும் அறை வாடகை மற்றும் ஓட்டல் கட்டணம் ஆகியவற்றை எல்லாம் கட்ட சொல்லி ஊழியர்கள் வலியுறுத்தி இருந்தார்கள். இதையடுத்து படக்குழுவினர் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தி இருந்தார்கள். ஆனால், அந்த பணம் ஹோட்டல் வங்கி கணக்கில் வரவில்லை. இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் படக்குழுவினரிடம் உடனடியாக ஓட்டல் கட்டணத்தை கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருந்தார்கள். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் நடிகர் காளிதாஸ் உட்பட பட குழுவினர் அனைவரையும் சிறைபிடித்து இருந்தார்கள். இதையடுத்து போலீசாருக்கு இதுகுறித்து தகவலை தெரிவித்தார்கள். பின்இருவரிடமும் விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பின்னர் படக்குழுவினர் ஹோட்டல் கட்டணத்தைச் செலுத்தி இருக்கிறார்கள். இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் நடிகர் ஜெயராம் மற்றும் படக்குழுவினரை விடுவித்து இருக்கிறார்கள். தற்போது இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement
Advertisement