மலையாள நடிகர் கைலாஷ் நாத் காலமாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாள மொழியில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கைலாஷ் நாத். இவர் கேரள மாநிலம் மன்னார் பகுதியை சேர்ந்தவர். இவர் மிமிக்ரி கலைஞர் ஆக தான் சினிமாவுக்குள் நுழைந்தார். பின் 1977 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த சங்கம் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நடிகராக அறிமுகம் ஆகியிருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் ஏதோ ஒரு ஸ்வப்னம், சேதுராமய்யர் சிபிஐ, சீதா கல்யாணம், யுகபுருஷன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இதுவரை இவர் 163 படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் டி.ராஜேந்திரன் இயக்கி நடித்த ஒரு தலை ராகம் படத்தில் தம்பி என்ற கதாபாத்திரத்தில் கைலாஷ் நடித்திருந்தார். மேலும், இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Advertisement

கைலாஷ் நடித்த படங்கள் :

இவர் பாலைவனச் சோலை என்ற படத்தில் நடித்திருந்தார். பின் சூப்பர் ஸ்டார் நடித்த வள்ளி திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பாராட்ட பெற்றிருந்தது. இப்படி இவர் தமிழ் சினிமாவில் 90 படங்களில் நடித்திருக்கிறார். அதற்குப்பின் இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை தொடர்களையும் நடித்திருக்கிறார். இப்படி கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக கைலாஷ் நாத் அவர்கள் சினிமாவில் பயணித்திருக்கிறார்.

காமெடி வேடங்களில் கைலாஷ் :

மேலும் இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் காமெடி வேடங்களில் தான் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இவர் மலையாளத்தில் வெளியான ஒரு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருக்கும் சிரஞ்சீவி இவருடைய பள்ளி வகுப்பு தோழர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில், சமீப காலமாகவே இவர் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்.

Advertisement

கைலாஷ் நாத் இறப்பு :

இதனால் இவருக்கு சில மாதங்களாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி நடிகர் கைலாஷ் நாத் அவர்கள் இறந்திருக்கிறார். இவருடைய மறைவு தென்னிந்திய சினிமாவில்மட்டுமின்றி மலையாள திரை உலகினர் மத்தியில்அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை அடுத்து பலரும் கைலாஷ் நாத் அவர்களின் இறப்பு குறித்து இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Advertisement