பொய் சொல்லி மாட்டிக்கொண்ட கமல் ! கமலுக்கே குறும்படம் போட்ட ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் வாழ்க்கையை 63 வயதில் துவங்கி உள்ளார். இன்று மாலை தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை அறிவிக்க உள்ளார். இன்று ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பிப்பதாக கூறி அங்கு சென்று வந்தார்.
அப்துல் கலாமின் இறுதி ஊர்வலத்திற்கும் நினைவஞ்சலிக்கும் வராத கமல்ஹாசன் அரசியல் பயணத்தை மட்டும் அவரிடம் இருந்து துவங்குகிறேன் என அவர் பெயரை வைத்து லாபம் தேட முயற்சி செய்வதாக பல விமர்சனங்கள் வந்தது.அப்துல் கலாம் வீட்டிற்கு சென்றுவிட்டு பத்திரிக்கையாளரை சந்தித்த கமல்ஹாசனிடம் இதுபற்றி கேட்க்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன்
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பழக்கம் தனக்கு இல்லை என கூறினார். ஆனால் இதற்குமுன்னர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்ததற்கும், கவிஞர் வாலியின் இறுதி ஊர்வலத்திலும் கமல்ஹாசன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஏன் இவ்வாறு தனக்கு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பழக்கம் இல்லை என பொய் கூறினார் என மக்களுக்கு தெரியவில்லை.