ஒரு போனால் என் வாழ்க்கையே மாறியது என்று மாதவன் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.அதன் பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

Advertisement

நடுவில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.

மாதவன் அவர்கள் கல்யாணமாலை நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய திரைப் பயணம் தொடங்கிய அனுபவத்தை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, நான் மும்பையில் இருந்த போது ஹிந்தி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெரிய அளவில் வாடகை வீட்டில் இருக்க பணம் கிடையாது. அதனால் ஆறு அடுக்கு பில்டிங்கில் ஒரு பக்கம் சுவர் இருக்காது.அங்கு தான் வாடகை கொஞ்சம் கம்மியாக இருக்கும். அந்த வீட்டில் தங்கி இருந்தேன்.

அதோடு அப்போது என்னிடம் மொபைல் எல்லாம் கிடையாது. பக்கத்து வீட்டில் இருந்த ஒரு வயதானவரின் போன் நம்பரை தான் என்னுடைய படத்தின் தயாரிப்பாளர் இடம் கொடுத்து இருந்தேன். அவர் இன்னிக்கி சூட்க்கு இங்கு வந்து விடுங்கள், சூட் இல்லை என்று எல்லா தகவலையும் அந்த மொபைல் நம்பருக்கு போன் பண்ணி சொல்லுவார் என்று கூறி இருந்தார். இப்படி செல்போன் கூட இல்லாமல் இருந்த மாதவனின் தற்போதைய வீட்டை பாருங்க.

Advertisement