தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ் பாபு பல ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார்.2005 இல் நம்ரடா ஷிரோத்கர் என்ற மிஸ் இந்தியா அழகியை திருமணம் செய்த கொண்ட மகேஷ் பாபு சமீபத்தில் ஒரு பெண்ணிற்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போல ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஏற்படுத்தியது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ஸ்பைடர் என்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.தற்போது 42 வயதாகும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தை களுக்கு தந்தையாக இருந்தாலும் இன்றும் பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கிறார் மகேஷ் பாபு.
மேலும் தற்போது இவர் நடித்து வெளியாகியுள்ள பரத் அனே நேனு என்ற படமும் இந்த வாரம் வெளியாகி பாக்ஸ் ஆபிசை கலக்கி வருகின்றது.திருமணம் ஆனாலும் படங்களில் முத்த காட்சிகளில் தயங்காமல் நடிக்கும் மகேஷ் பாபு வெளியுலகில் ஒரு ஜெண்டில் மேன் தான் அதனால் தான் இதுவரை இவர் எந்த ஒரு கிசு கிசுவிலும் சிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணிற்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்று ஒரு புகைபடத்தை பதிவிட்டுள்ளார் மகேஷ் பாபு.
அந்த புகைப்படத்தில் அந்த பெண்ணின் முகம் சரியாக தெரியாத நிலையில் அந்த பெண் யார் என்று ரசிகர்கள் பலரும் குழம்பி இருந்தனர். மகேஷ் பாபுவா இப்படி செய்தார் என்று ஆச்சர்யத்தில் இருந்தனர். இந்நிலையில் அந்த புகைப்படத்தில் அவர் முத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் பெண் வேறு யாரும் இல்லை அவரது மனைவி தான் என்று ஊர்ச்சிதமாகி யுள்ளது. இதனால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்