-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

என் காதலன் என்னை ஏமாற்றிவிட்டான், அவன் நல்லாவே இருக்க மாட்டான் – புலம்பிய நிவேதா பெத்துராஜ்

0
45

தன்னை பாய் பிரண்டு ஏமாற்றி விட்டதாக நடிகை நிவேதா பெத்துராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக நிவேதா பெத்துராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றாலும் சிறுவயதாக இருக்கும் போதே துபாய் சென்று விட்டார். அங்கேயே தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இவர் மாடலிங்கில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவர் மீடியாவிற்குள் நுழைந்தார். பின் இவர் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு நாள் கூத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற விருதினையும் இவர் பெற்றார். அதன் பின்னர் இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘டிக் டிக் டிக்’, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘திமிருபிடித்தவன்’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் பொதுவாக என் மனசு தங்கம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் போன்ற பல படத்தில் நடித்து இருந்தார்.

நிவேதா பெத்துராஜ் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழி படத்திலும் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், சுரேஷ் சந்திரா, மகேந்திரன், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

நிவேதா நடித்த பார்ட்டி படம்:

-விளம்பரம்-

இதனை அடுத்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் ஜெய், சாம், சிவா, சந்திரன், சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் பல காரணங்களால் தள்ளிக் கொண்டே சென்றிருக்கிறது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்று சமீபத்தில் வெங்கட்பிரபு பேட்டியில் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

நிவேதா பெத்துராஜ் பேட்டி:

இதை அடுத்து இவர் நிவேதா பெத்துராஜ் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நிவேதா பெத்துராஜ், நான் என்னுடைய மனதில் என்ன நெகட்டிவ்வாக நினைத்தாலும் அது நடந்துவிடும். என்னுடைய பாய் பிரண்டு என்னை ஏமாற்றி விடுவான் என்று நினைத்தேன்.

காதல் தோல்வி குறித்து சொன்னது:

அதேபோல் நடந்தது. அதுமட்டுமில்லாமல் அவன் யாருக்காக என்னை விட்டு செல்வான் என்பதையும் நான் கற்பனை செய்தேன். அதே மாதிரி தான் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. இப்படி நான் யோசிக்கும் விஷயம் எல்லாம் எப்படியோ நடந்து விடுகிறது. இப்போது நான் வைத்திருக்கும் கார் ஏற்கனவே நான் யோசித்தது தான். அதேபோல் நான் எதிர்காலத்தில் என்ன கார் வாங்க வேண்டும் என்றும் யோசித்து வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news