நித்யானந்தா சீடர்களை பிரபல நடிகர் ட்விட்டரில் வெளுத்து வாங்கி உள்ளார் - விபரம் உள்ளே

By Ashok · 22/1/2018
ஆண்டாள் சர்ச்சையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மீதான தாக்குதல்கள் அதிகமான வேளையில் சில அருவருக்கத்தக்க செயல்களும் அரங்கேறியது. பாலியல் சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பல ஆயிரம் பெண்கள் சீடர்களாக இருக்கின்றனர். அந்த பெண்கள் பலர் ஒன்றாக சேர்ந்த கவிப்பேரரசு வைரமுத்துவை கேவலமான சொற்களால் வசை பாடி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கினர். இத்தனைக்கும் அந்த பெண்களில் பலர் 16 வயது நிரம்பாத சிறுமிகள். இதனை எல்லாம் பார்த்த நடிகர் பிரசன்னா,உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு" என பதிவிட்டு தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவ்வளவு பாலியல் புகார்களில் பகிரங்கமாக சிக்கிய நித்தியானந்தா போலி சாமியாரை இன்னும் மக்கள் போன்ற தொடர்கிறார்கள் என்பது எவ்வளவு ஆபத்தான செயல்? உடனடியாக அரசாங்கம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உண்மையான ஆண்டாள் பக்தர்களின் எண்ணம். [embed]https://twitter.com/Prasanna_actor/status/955068365701173248[/embed]
behindtalkies AMP · Quick view
View full