தன்னுடைய மகளுக்கு ரசிகையின் பெயரை நடிகர் ரகுமான் வைத்திருந்த காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டத்தில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் ரகுமான். 1986 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய நிலவே தந்தை என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், நடிகர் ரகுமான் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார். பிறகு ரகுமான் அவர்கள் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சிறிய இடைவெளிக்கு பின் இவர் நடித்த துருவங்கள் பதினாறு படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Advertisement

ரகுமான் திரைப்பயணம்:

பின் அன்றிலிருந்து இன்று வரை பல ஹிட் படங்களில் ரகுமான் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் மதுராந்தக சோழனாக நடித்திருந்தார். முதல் பாகத்தை தொடர்ந்து பொன்னியின் முதல் 2 படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதோடு இந்த படத்தின் மூலம் ரகுமானுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

ரகுமான் குடும்பம்:

இதனை தொடர்ந்தும் இவர் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ரகுமான் அவர்கள் மெகருநிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ரா பானுவின் தங்கை தான் இந்த மெகருநிஷா. நிகழ்ச்சி ஒன்றில் மெகருநிஷாவை பார்த்த போது ரகுமான் காதலில் விழுந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் காதலித்தவரை கரம் பிடித்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement

ரகுமான் பேட்டி :

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரகுமான் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய மகளுக்கு பெயர் வைத்த காரணம் குறித்து சொன்னது, இலங்கையில் எனக்கு ஒரு தீவிர ரசிகை இருந்தார். அவருக்கு என்னை எப்படியாவது தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்து விட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த சமயத்தில் தான் நான் இலங்கைக்கு சூட்டிங் காக சென்று இருந்தேன். இதை அறிந்த அந்த ரசிகையின் பெற்றோர்கள் என்னை நேரில் சந்தித்து தங்களுடைய மகளின் ஆசையை கூறி இருக்கிறார்கள்.

Advertisement

தன் மகள் பெயர் காரணம்:

இதனை அடுத்து நானும் அந்த ரசிகையின் வீட்டிற்கு ஒருநாள் இரவு விருந்துக்காக சென்றிருந்தேன். அங்கு வீட்டிற்கு சென்றதுமே நான் வாய் அடைத்துப் போனேன். அந்த வீட்டில் மட்டுமில்லாமல் பாத்ரூம் என திரும்பிய எல்லா பக்கமும் என்னுடைய புகைப்படங்கள் தான் ஒட்டப்பட்டு இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவர் என்னை நேரில் சந்தித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தாராம். அதன் பிறகு நான் அவரை நேரில் சந்தித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அட்வைஸ் பண்ணினேன். இப்படி நமக்கு ஒரு ரசிகை இருக்கிறாரே என்று வியந்து போய் அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் நினைத்து தான் எனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு அந்த ரசிகையின் பெயரை வைத்தேன். அது மட்டும் இல்லாமல் அந்த ரசிகையும் அவருக்கு பிறந்த குழந்தைக்கு என்னுடைய பெயரை வைத்திருக்கிறார் என்று கூறியிருந்தார்.

Advertisement