திரைத்துறையில் நடித்துவரும் பெண்களுக்கும்,வாய்ப்பு கேட்டுவரும் பெண்களுக்கும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக சமீபகாலங்களாக புகார்கள் வந்தவண்ணமே உள்ளன.

Advertisement

அந்தவகையில் தெலுங்கு திரையுலகில் சமீபத்தில் பரபரப்பான விசயங்கள் நடந்து வருகின்றன. தன்னுடன் பழகிய திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தன்னிடம் தவறாக பேசியதையும், நடந்துகொண்டதையும் ஆதாரங்களுடன் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார் நடிகை ஸ்ரீரெட்டி.அவரைத்தொடர்ந்து பல முன்னனி நடிகைகளும் தற்போது தங்களது நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகில் மற்றொரு பூதம் கிளம்பியுள்ளது. சமூக ஆர்வலரான சந்தியா “நடிகர் பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மனைவி தனது கணவரின் காம இச்சையை தீர்க்க பல கல்லூரி பெண்களிடம் மயக்கி பேசியும், மிரட்டியும் படுக்கைக்கு அனுப்பி வைப்பதாக” அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

ராஜசேகரின் மனைவி ஜீவிதா இதுபோல அமீர்பேட் பகுதியிலுள்ள பல பெண்களின் வாழ்க்கையையே சீரழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மனைவியே கணவனின் காம சுகத்துக்காக படிக்கும் கல்லூரிபெண்களை படுக்கைக்கு அனுப்பி வைக்கும் இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுசென்றுள்ளது எனலாம்.

Advertisement