உடல்நலக் குறைவால் நடிகர் மனோபாலா இன்று காலமாகி இருந்த நிலையில் தற்போது பிரபல நடிகர் சாரத்பாபுவும் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பதாக திடீர் செய்திகள் பரவியது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் சரத்பாபு. இவர் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டினப்பிரவேசம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.

. இவர் கமலஹாசன், ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசன், ரஜினிகாந்த்துக்கு நண்பர் என்றாலே இவரைத்தான் பெரும்பாலும் போடுவார்கள். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிறமொழிப் படங்களில் நடித்து இருக்கிறார்.

Advertisement

கடைசியாக இவர் தமிழில் வசந்த முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் சின்னத்திரை சீரியல் நடித்திருந்தார். இப்படி இவர் கிட்டதட்ட 50 வருடங்களுக்கும் மேலாக 200 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, கடந்த சில மாதங்களாகவே சரத்பாபுவின் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.

இவருடைய சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் என உடல் உறுப்புகள் நோய் அலர்ஜியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினையால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையும் பெற்று வந்திருந்தார். தற்போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு இவர் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவரை குடும்பத்தினர் ஹைதராபாத்துக்கு மாற்றி இருக்கின்றனர்.

Advertisement

இவருக்கு சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் தான் இவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

Advertisement

இதனால் திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலருமே இவர் கூடிய விரைவில் குணமாகி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக ஒரு செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இப்படி ஒரு நிலையில் அது தவறான செய்தி என்றும் சரத்பாபு இன்னும் சிகிச்சையில் தான் இருக்கிறார் என்றும் அவரது சகோதரி தெரிவித்து இருக்கிறார்.

Advertisement