ஸ்டெர்லைட் போராட்ட கலத்தில் சரத்குமார் செய்த செயல் ! அதிசயமாக பார்த்த மக்கள்- போட்டோ உள்ளே

By Ajju · 31/3/2018
சில மாதங்களாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆரம்பிப் பதற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்களும்,இளைஞர்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மற்றும் அதனை சிற்றியுள்ள சில மாவட்டங்களிலும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலில் இந்த போராட்டத்தை மீடியாக்கள் எந்த ஒரு செய்தியையும் வெளியிடாமல் வந்தது.பின்னர் போராட்டம் தீவிரமடையவே ஒரு சில தனியார் தொலைக்காட்சி மட்டும் இந்த பிரச்சனை குறித்த சில தொகுப்புகளை ஒளிபரப்ப தொடங்கியது. [embed]https://twitter.com/realsarathkumar/status/980048340472573952[/embed] மேலும் இந்த பிரச்னையை தமிழக அரசும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.இதையடுத்து நடிகரும் ,சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத் குமார் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கலந்து கொண்டுள்ளார். தூத்துக்குடியில் நடந்த போரத்தில் பங்கேற்ற சரத்குமார் குமரெட்டியாபுரம் மக்கள் பயன் படுத்தும் மாசுபட்ட குடிநீரை குடித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார். மக்கள் அழைத்தால் தான் வருவேன் என்று கூறும் சில மைய அமைப்பின் தலைவர்களை விட சரத் குமாரின் இந்த செயல் மிகவும் பாராட்டதக்கதே.மேலும் ஸ்டெர்லைட் பிரச்னையில் களத்தில் குதித்த முதல் அரசியல் கட்சி தலைவரும் இவர் மட்டும் தான்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full