ஒரு டம்ளர் தண்ணீருக்கு ஆதரவு ! சிம்புவின் அடுத்தகட்ட அதிரடி ஐடியா ? கேட்டா ஷாக் ஆவிங்க

By Ajju · 13/4/2018
தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமே கர்நாடகாவில் இருந்து காவேரி நீரை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்கு தான். அனைவரும் பல்வேறு வழிகளில் போராடி வந்த நிலையில் நடிகர் சிம்பு மட்டும் வித்யாசமாக, இது அரசியல் பிரச்சனை கிடையாது மத்திய அரசே நினைத்தாலும் இந்த காவேரி பிரச்னையை தீர்த்து வைக்க முடியாது.இதற்கு ஒரே வழி நமது சகோதர மாநிலமான மக்களிடமே நாம் நேரடியாக வேண்டுகோளை வைப்போம் அவர்கள் சொல்லட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்று தெறிவித்திருந்தார். கர்நாடக மக்கள் தண்ணீர் தர சம்மதம் என்றால் ஒரு டம்ப்ளரில் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.அவர் சொன்னது போலவே கன்னடர்கள் அனைவரும் தமிழர்களுக்கு ஆதரவாக தண்ணீர் கொடுத்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர் .இதன் மூலம் சிம்புவிற்கு கன்னடர்கள் பெரும் ஆதரவையும் தெரிவித்தும் வருக்கின்றனர். இந்நிலையில் காவேரி நீரை தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியின் அடுத்தகட்ட முயற்சியாக நடிகர் சிம்பு கர்நாடக முதலமைச்சர் சித்த ராமைய்யாவை சந்திக்கவுள்ளார், மேலும் அவரை சந்திபதற்காக சிம்பு அனுமதி கேட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full