விஜய்யை போல் தன் மகளுக்காக சிவகார்த்திகேயன் செய்த காரியம் - புகைப்படம் உள்ளே !

By Ajju · 8/4/2018
நடிகர் சிவகார்த்திகேயன் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் தனது குடும்பத்தை கண்ணும் கருத்துமாக கவினித்து கொள்கிறார்.நடிகர் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் ஒரு சிறந்த இடத்தில் இருந்து வருகிறார். ஆனால் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்திலேயே இவரது அத்தை மகளான ஆர்த்தி தாஸ் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.பின்னர் இவர்களுக்கு 2013 இல் ஆராதனா என்ற ஒரு மகள் பிறந்தார் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது மகளை பள்ளியில் சேர்த்தார் சிவா. மேலும் தனது ஓய்வு நேரத்தை முழுவதும் தனது மகளுடன் கழித்து வரும் சிவா சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட தனது மகளுடன் டப் ஸ்மாஸ் ஒன்றை கூட வெளியிட்டார். இந்நிலையில் தற்போது 1 ஆம் வகுப்பு படித்து வரும் தனது மகளின் பள்ளி நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.தனது மகளின் நடனத்தை காண கூட்டத்தில் ஒரு சாதாரண ஆளாக அமர்ந்து விழாவை கண்டுகளித்துள்ளார் சிவகார்த்திகேயன். ஒரு பிரபலமான நடிகரான சிவகார்த்திகேயன் தனது மக்களுக்காக எந்த வித பந்தவும் இல்லாமல் நிகழ்ச்சிக்கு சென்றிருக்கும் சிவாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
behindtalkies AMP · Quick view
View full