திருமணம் செய்து கொள்ளாததற்கு இது தான் காரணம் என்று முதன்முதலாக எஸ் ஜே சூர்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் துணை இயக்குனராக தான் பணியாற்றினார். அப்படியே படங்களில் ஒரு சில காட்சியில் நடித்தும் இருக்கிறார்.

அதன் பின்னர் அஜித் குமார் நடித்த “ஆசை ” படத்தில் துணை இயக்குனராக இருந்த போது அஜித்திடம் கதை கூறி இருக்கிறார். பின் எஸ் ஜே சூர்யா சொன்ன கதை அஜித்திற்கு பிடித்து போக “வாலி ” படத்தை ” இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதன் பின் விஜய்யின் குஷி படத்தையும் எஸ் ஜே சூர்யா தான் இயக்கி இருந்தார். இப்படி தமிழ் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக எஸ் ஜே சூர்யாவின் படம் அமைந்திருந்தது. அதற்கு பிறகு இவர் நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி போன்ற பல படங்களை நடித்தும், தயாரித்தும் இருக்கிறார்.

Advertisement

ஸ் ஜே சூர்யாவின் திரைப்பயணம்:

பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்திலும், விஜயின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இந்த படங்கள் மூலம் பெருத்த வரவேற்பை பெற்றார் எஸ்.ஜே.சூர்யா. அதனை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார். இவர் நடித்த மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகி நல்ல வெற்றி பெற்று இருந்தது.

எஸ் ஜே சூர்யா நடித்த படங்கள்:

பின் கடந்த ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருந்த மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவரின் நடிப்பில் உருவாகி உள்ள இறவாக்காலம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் எஸ் ஜே சூர்யா அவர்கள் பொம்மை போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு வருகிறார்.

Advertisement

எஸ் ஜே சூர்யா திருமணம்:

இயக்குனர் சங்கர் படத்திலும் இவர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சமீப காலமாக நடிகர் எஸ் ஜே சூர்யா திருமணம் குறித்த செய்திகள் வைரலாகி வருகிறது. எஸ்.ஜே. சூர்யாவிற்கு 54 வயது ஆகிறது. ஆனால், இன்னும் திருமணம் ஆகவில்லை. விரைவில் இவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், இதற்காக மணப்பெண்ணை எஸ் ஜே சூர்யா குடும்பத்தினர் தீவிரமாக தேடி வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால், இது எல்லாம் வதந்தி என்று எஸ் ஜே சூர்யா மறுத்திருந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் எஸ் ஜே சூர்யா கூறியிருக்கிறார்.

Advertisement

எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி:

அதில் அவர், சினிமாவில் நான் ஆபத்தான சில விஷயங்களில் துணிந்து இறங்க வேண்டி இருக்கிறது. சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் நான் இயக்கி நடித்த நியூ படத்தில் முதலீடு செய்தேன். அந்த படம் வெற்றி பெற்றது. ஒருவேளை அந்த படம் தோல்வி அடைந்திருந்தால் என்னுடைய நிலைமை மோசமாக இருந்து இருக்கும். அந்த கஷ்டம் என்னுடைய போயிருக்கும். ஆனால், திருமணம் ஆகி குழந்தை, மனைவி இருந்திருந்தால் அது அவர்களையும் பெரிய அளவில் பாதித்திருக்கும். இப்படி பல சிந்தனைகளால் தான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement