'MAY EYE COME IN' என்னுடைய முதல் நாவல் - மாநகர நடிகர் ஶ்ரீ கொடுத்த அப்டேட் , என்ன தெரியுமா?
நடிகர் ஸ்ரீ எழுதி இருக்கும் நாவல் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் ஸ்ரீ. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த கனா காணும் காலங்கள் என்ற தொடரின் மூலம் தான் நடிக்க வந்தார். இதில் இவர் ஸ்ரீராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் இவருக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அதன் படி இவர் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு எண் 18 கீழ் 9 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் தெருவில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்ட பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் இவர் வில் அம்பு, மாநகரம் போன்ற படங்களில் எல்லாம் நடித்திருந்தார்.
ஸ்ரீ குறித்த தகவல்:
குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அதனை தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இறுக்கப்பற்று படத்தில் ஸ்ரீ நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் யுவராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த், சானியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.
ஸ்ரீ நிலைமை:
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இந்த பெற்றிருந்தது. ஆனால், இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ நடிப்பில் எந்த படமுமே வெளியாகவில்லை. இவர் சினிமாவில் இல்லாததால் ரசிகர்கள் பலருமே ஸ்ரீக்கு என்னாச்சு? எதனால் அவர் படங்களில் நடிக்கவில்லை? ஏதாவது பிரச்சனையா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதற்கிடையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதில் அவர், உடல் மெலிந்து நீண்ட தலை முடியுடன் ரொம்ப பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தார். இது ஸ்ரீயா? எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே? என்றெல்லாம் ரசிகர் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
ஸ்ரீ நிலைமைக்கு காரணம்:
இன்னொரு தரப்பினர் இது உண்மையாகவே ஸ்ரீயின் புகைப்படமா? இல்ல வேறு யாரேனும் அதை தவறாக பயன்படுத்தியிருக்கிறார்களா? என்றெல்லாம் கேட்டு இருந்தார்கள். மேலும், ஸ்ரீயின் இந்த நிலைமைக்கு காரணம், இவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார் என்றும், சினிமா வாய்ப்பு கிடைக்காததால் இவர் மன வேதனையில் போதை பொருளுக்கு அடிமையானார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் உண்மையிலேயே என்ன நடந்தது? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து பிரபலங்கள் பலருமே நடிகர் ஸ்ரீயின் நிலைமையை பற்றி பதிவு போட்டு இருந்தார்கள்.
ஸ்ரீ பதிவு:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ஸ்ரீ நாவல் எழுதி இருப்பதாக வெளியகி இருக்கும் செய்திதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பின் இது தொடர்பாக நடிகர் ஸ்ரீயும் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், MAY EYE COME IN?' என்ற நாவலை எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், '18 ஜூன் 2025, புதன்கிழமை. எனது முதல் ஆங்கில நாவலான "MAY EYE COME IN?"-ஐ உலகிற்குப் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. "AMAZON.IN"-ல் உங்கள் கிண்டில் பிரதிகளை இப்போதே பெறுங்கள் என்று கூறி இருக்கிறார்.