நடிகர் ஸ்ரீகாந்த், 2002 தமிழில் வெளியான “ரோஜா” கூட்டம் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லேட் பாய் பட்டத்தை பெற்றரவர்.

Advertisement

ரோஜா கூட்டம் படத்திற்கு பிறகு பல தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். தமிழில் சாக்லேட் பாய் என்ற பெயரை எடுத்ததால் அந்த பெயரை மாற்ற பல வித்தியாசமான கதை களத்தில் நடித்து வந்தார். இருப்பினும் இவர் நடித்த எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு ஓடியது இல்லை.

நடிகை ஸ்னேஹாவுடன் பல ஆண்டுகள் காதல் கிசுகிசுக்களில் விழுந்து வந்த ஸ்ரீகாந்த், பின்னர் 2007 ஆம் ஆண்டு வந்தனா என்ற தெலுகு குடும்பத்தை சார்ந்த வந்தனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் பிறந்தனர்.

Advertisement

சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் தனது மகனுடன் விஷால் நடித்த “இரும்புத்திரை”படத்தை பார்க்க திரையரங்கம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது தனது மகனுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் நடிகர் ஸ்ரீகாந்த். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement