பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சுஜிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் கலக்கியிருக்கிறார். அதற்குப் பிறகு இவர் துணை கதாபாத்திரங்களில் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் சினிமா வரவேற்பு குறைந்து உடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.

தற்போது இவர் சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சுஜிதாவின் அண்ணனும் மிகப்பெரிய நடிகர்தான் . சுஜிதா அண்ணன் பெயர் சுப்பிரமணி ராதா சுரேஷ். ஆனால், இவரை எல்லோரும் சூரிய கிரண் என்று தான் அழைக்கிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற பல சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருக்கிறார்.

Advertisement

கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு நடிகராவதை விட இயக்குனர் ஆவதில் தான் அதிக ஆர்வம்.அதன் பின் இவர் இயக்கம் பக்கம் சென்று விட்டார். தெலுங்கில் இவர் இயக்கிய படம் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. தெலுங்கில் 2003ல் வெளியான ‘சத்யம்’, ‘பிரமஸ்தரம்’, ‘ராஜூ பாய்’ என பல படங்களை இயக்கினார்.

அதற்குப் பின் இவர் இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சூரிய கிரண் இன்று காலை சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் உடல்நிலை பாதிப்பின் காரணமாக இறந்திருக்கிறார். அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இவரது இறப்பிற்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அதே போல சகோதரனை பிரிந்து வாடும் சுஜிதாவிற்கும் ஆறுதல் கூறி வருகின்றனர். சூரிய குமார் சமுத்திரம் படத்தில் சரத் குமாருக்கு தங்கசியாக நடித்த காவேரிக்கும் சூரிய கிரணுக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸுக்கு பின் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சூர்யா கிரண், நாங்கள் பிரிந்தது உண்மை தான். ஆனால், இப்போதும் அவள் என்னிடம் திரும்பி வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன். அவள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இன்றும் என்னுடைய போன், ஐபாடில் கூட அவளுடைய புகைப்படத்தை தான் வைத்துளேன். என் அம்மா கூட சொன்னார்கள், இன்னும் அவள் போட்டோவை வச்சிருக்க உனக்கு வெக்கமா இல்லையா என்று கேட்டார்.

ஆனால், என்னை பொறுத்த வரை இந்த ஜென்மத்திற்கும் அவள் ஒருத்தி தான் எனக்கு என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார். மேலும் வாழ்க்கையில் வெற்றியை பார்த்த பிறகு தோல்விகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி சூர்யா கிரண், தனது வீட்டை ஜப்தி செய்தார்கள், காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், விபத்து கூட ஏற்பட்டது. இப்படி அனைத்து கெட்ட நேரங்களும் ஒரே சமயத்தில் தன்னை ஆட்டி படைத்ததாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement