நடிகர் வைபவ் ரெட்டி,தமிழில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.
இவர், இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் என்பது குறிப்பிட்டத்தக்கது. இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கோதவா’ எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

Advertisement

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர். இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் வெங்கட் பிரபு தான். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வைபவ்.

அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய “மங்காத்தா, சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார் வைபவ். இந்நிலையில் ‘ சென்னை 28-2 ‘படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் வைபவ்,வெங்கட் பிரபு மற்றும் சிலர் மதுரைக்கு சென்றனறாம். அப்போது வழியில் ஒரு உணவதிலும் சாப்பிட்டுள்ளனர். இதில் நடிகர் வைபவ்விற்க்கு ஆனா செலவு மட்டும் 35 ஆயிரம் ரூபாய்யாம்.

Advertisement

Advertisement

நடிகர் வைப்பாவிற்கு இந்த செலவெல்லாம் மிகவும் சாதாரணமாம். அவர் ஒரு நாளைக்கு இதைவிட அதிகமாக செலவு செய்வாராம். இந்த தகவலை சென்னை 28 படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு சமீபத்தில் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த தகவலை கேட்டதும் வைபவ் மிகவும் வசதியானவர் என்று தான் எண்ணம் தோன்றுகிறது.

Advertisement