கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பந்த் ஒன்றை அறிவித்தது அதில் இனிமேல் புதிய படம் எதுவும் வெளியிட கூடாது என்றும் 16ஆம் தேதி முதல் எந்த ஒரு படப்பிடிப்பும் நடத்த கூடாது என்றும் அறிவித்தனர்.
இந்நிலையில் பல படங்களில் படப்பிடிப்புகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் விஜய் நடித்துவரும் விஜய்-62 அவரது படத்தின் படப்பிடிப்பு சென்னை விக்டோரியா அரங்கில் நடந்துள்ளது.
அதனை பலரும் எதிர்த்து வந்த நிலையில் சூது கவ்வும்,ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் படபிடிப்பு நடத்தியதை கிண்டல் செய்துள்ளார். ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ளார் கருணாஸ் ஸ்ட்ரைக் இருக்கு ஆனால் இல்லை என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.