சென்னைக்கு அவசரமாக திரும்பும் நடிகர் விஜய் - காரணம் என்ன ?
தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள மெர்சல் திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் முடிந்து தற்போது புரமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு.
தற்போது அந்த படத்தின் சேட்டிலைட் உரிமத்தை 'ஜீ' தொலைக்காட்சி நிறுவனம் 28 கோடியைக் கொடுத்து வாங்கியுள்ளது.இந்த நிலையில் இன்று முதல் ‘மெர்சல்’ படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பிக்க உள்ளதாகவும்,
இதையும் படிங்க: வெளிநாட்டில் மட்டும் மெர்சல் படம் எத்தனை கோடி வியாபாரம் தெரியுமா !
புரமோஷனில் கலந்து கொள்ள விஜய் விரைவில் வெளிநாட்டில் இருந்து அவசரமாக சென்னை வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.