மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பற்றி நாம் அனைவரும் அறிவோம்.தனது கடின உழைப்பின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கி இன்று ஒரு மிகப்பெரிய நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் துணை நடிகராக இருந்த இவர் பின்னர் ஹீரோவாக நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி எப்போதும் தம்மிடம் பழகுவார்களை அன்பாக பார்த்துக்க கொள்வார். மேலும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மிகவும் எளிமையாக செல்வார் அவர் இந்த குணத்திற்கு காரணம் அவர் பிறந்த ஊரும் அவர் வளர்ந்த குடும்பம் தான்.
மதுரையில் பிறந்த விஜய்சேதுபதிக்கு ஜெயஸ்ரீ என்ற தங்கையும் உண்டு முதலில் மதுரையில் இருந்த இவர்கள் சில வருடங்களுக்கு பின்னர் தனது அப்பா, அம்மாவுடன் சென்னைக்கு வந்துவிட்டார்கள்.விஜய் சேதுபதி தனது தங்கையை மிகவும் பாசமாக பார்த்துக்ககொள்வாராம் ஒரு வேளை தன் அப்பா,அம்மா இல்லை என்றால் அவரது தங்கைக்கு உணவளிப்பது,அவருக்கு தலை சீவிவிடுவது,பள்ளியில் விட்டுவருவது என எல்லாவற்றையும் செய்வாராம் விஜய் சேதுபதி.
சிறு வயது முதலே ஆடைகள் மீது மிகுந்த ஆசை கொண்ட ஜெயஸ்ரீ பள்ளி படிப்பை முடித்தவுடன் ஆடை வடிவமைப்பாளர் படிப்பை படித்தார். பின்னர் படிப்பை முடித்துவிட்டு ஒரு துணி கடையையும் வைத்தார். அந்த தொழில் நன்றாக ஓட பின்னர் பல கிளைகளை தொடங்கிவிட்டார் ஜெயஸ்ரீ.இவர் தற்போது செம்பரம்பாக்கத்தில் இறைவி போடிக் ஷாப் என்னும் மிகப்பெரிய கடையை ஆரம்பித்துள்ளார்.