நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மூச்சி திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில காலமாக இவர் உடல் நிலை தெரிவதாகவும் விரைவில் பழையபடி வருவார் என்றும் அவரது குடுமத்தினர் தெரிவித்து இருந்தனர்.

 உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்து கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட அவர் போட்டியிடவில்லை. இருப்பினும் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜயகாந்த் வெறும் கையை மட்டும் அசைத்துவிட்டு தான் வந்தார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் இன்று அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்திற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் அவரை சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தால் ரசிகர்களும் அவரது தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள். அதேபோல விஜயகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை எந்த ஒரு அறிக்கையை வெளியிடாமல் இருக்கிறது. இருப்பினும் விஜயகாந்த் தற்போது நலமாக இருக்கிறார் என்றும் அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது என்றும் இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் விஜயகாந்த் தரப்பு தெரிவித்து இருக்கிறது.

Advertisement
Advertisement