தனக்குத்தானே சிலை வைத்த பிரபல நடிகர் விஜயகுமார் வீட்டின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய நடிப்பு பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.

அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் கதாநாயகனாகவும், முக்கிய வேடங்களில் தான் நடித்து இருந்தார். தற்போது விஜயகுமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார்.

Advertisement

விஜயகுமார் குடும்பம்:

மேலும், விஜய குமாருக்கு இரண்டு மனைவிகள், 5 பெண்கள் மற்றும் 1 ஆண் பிள்ளை இருப்பது நமக்கு தெரியும். விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தான் முதல் மனைவி. அதன் பின்னர் தான் விஜயகுமார் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா. மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி.

விஜயகுமார் குறித்த தகவல்:

இதில் வனிதா மட்டும் குடும்பத்துடன் சண்டை போட்டு பிரிந்து இருக்கிறார். அதேபோல் மறைந்த நடிகை மஞ்சுளாவின் நினைவு தினத்தை சமீபத்தில் தான் விஜயகுமார் தன்னுடைய குடும்பத்துடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தி இருந்தார். தற்போது விஜயகுமார் தன்னுடைய மகன், மகள்கள், பேரன், பேத்திகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அந்த வகையில் கடந்த மாதம் விஜயகுமாரின் முதல் மனைவியின் மகள் அனிதாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Advertisement

விஜயகுமார் சொந்த ஊர்:

இந்த நிலையில் விஜயகுமார் தனக்குத்தானே சிலை வைத்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் விஜயகுமார். இவருடைய உண்மையான பெயர் பஞ்சாட்சரம் ராமசாமி பிள்ளை. சினிமாவிற்காக தான் இவர் விஜயகுமார் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவருடைய தந்தை பெயர் ராமசாமி பிள்ளை, அம்மா பெயர் சின்னம்மாள். தன்னுடைய கிராமத்திலேயே விஜயகுமாருக்கு சொந்தமாக வீடு ஒன்று இருக்கிறது.

Advertisement

விஜயகுமார் சிலை:

முதலில் இந்த வீடு பழமையாக இருந்தது. அதை புதுப்பித்து விஜயகுமார் அழகாக கட்டியிருக்கிறார். மொத்த குடும்பமும் தங்கி செல்லும் வகையில் இவர் வீடு கட்டியிருக்கிறார். இந்த வீட்டில் 10 பெட்ரூம் இருக்கிறதாம். மேலும், இந்த பிரம்மாண்ட வீட்டினுடைய நுழைவாயிலில் விஜயகுமாரின் முதல் மனைவி மற்றும் இரண்டாம் மனைவியின் சிலை அமைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் விஜயகுமார் தன்னுடைய தாய், தந்தைக்குமே சிலை வைத்திருக்கிறார். அதோடு நடிகர் அருண் விஜய் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீசின் போதும் தன்னுடைய தாத்தா, பாட்டியின் சிலை முன்பு பேனர் வைத்து வணங்கி விட்டு தான் செல்வாராம்.

Advertisement