விஷால் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த துப்பறிவாளன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அனு இம்மானுவேல், வினய், பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து ‘துப்பறிவாளன் 2’ படம் உருவாகி வந்தது. மேலும், இந்த படத்தை நடிகர் விஷாலே தயாரித்து, நடித்து வந்தார். மேலும், இந்த படத்தை மிஸ்கின் இயக்கி வந்த நிலையில் அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகினார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. லண்டனில் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக 40க்கும் மேற்பட்ட படக்குழுவினருடன் விஷால் லண்டனில் தங்கி இருந்தார். அங்கு படப்பிடிப்பை மிஷ்கின் சரியாக திட்டமிடாததால் அனுமதி பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இருந்ததாக விஷால் கூறி இருந்தார்.

Advertisement

விஷாலுக்கும்,இயக்குனர் மிஸ்கினுக்கும் இடையே வாக்குவாதம் மோதலாக மாற பின்னர் விஷால் இந்த படத்தை தயாரிக்கப்போவது இல்லை என்று இந்த படத்தில் இருந்து விலகினார். இந்த விவாகரத்துக்கு பின்னர் விஷால் – மிஸ்கின் இருவரும் மாறி மாறி ஒருவருக்கு ஒருவரை குற்றம் சாட்டினார்கள். இந்த பிரச்சனை நடந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் தற்போது மீண்டும் மிஷ்கினை குறை சொல்லியுள்ளார் விஷால்.

லண்டனில் மிகவும் தாமதமாக படப்பிடிப்பை ஆரம்பித்து, ஒரு நாளைக்கு ஒரு காட்சியை மட்டுமே எடுத்தார் மிஷ்கின் என்று மிஷ்கின் மீதான குற்றச்சாட்டை மறுபடியும் புதுப்பித்துள்ளார் விஷால். மேலும், துப்பறிவாளன் 2 படத்தின் மீதிக் காட்சிகளை தானே இயக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். 2022-ல் அப்படம் திரைக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Advertisement