காமெடி நடிகர் விவேக் ஐ.பி.எல் மற்றும் இளைஞர்கள் பற்றி அசத்தல் கருத்து !

By Ajju · 4/4/2018
தற்போது தமிழ் நாட்டில் மிக பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமும், காவேரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி நடக்கும் போராட்டமும் தான்.முதலில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த பிரேச்சனைகள் வழக்கம் போல ஒரு சில நாட்களில் மக்கள் மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வருகிறது.இந்த பிரச்னையை அரசும் கண்டுகொள்ளாத நிலையில் தமிழக இளைஞர்களும் ,மக்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். [embed] https://twitter.com/Actor_Vivek/status/981473277771001857 [/embed] மேலும் சினிமா பிரபலங்கள் சிலர் இந்த போராட்டத்தை ஆதரித்து பேசிவருகின்றனர். ஆனால் தற்போது ipl துவங்க இருக்கும் நிலையில் நாம் இந்த பிரச்னையை மறந்து விடுவோம் என்று சற்று ஐய்யம் இருக்கத்தான் செய்கிறது.சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷ் கூட ஸ்டெர்லைட் பற்றி தனது எதிர்ப்பினை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து காமெடி நடிகர் விவேக் ஏற்கனேவே பொதுமக்களுக்காக பல நல்ல விஷயங்களை செய்தவர்.சுற்று சுழளுக்காக பல லட்சம் மறக்கன்றுகளையும் நட்டுள்ளார்.தற்போது விவேக் ஸ்டெர்லைட் விவாகரத்தில் தனது கனிவான வேண்டுகோளை ட்விட்டரில் வைத்துள்ளார்.அதில் கிரிக்கெட், சினிமா, பாலபிஷேகம்,தனிமனித துதி போன்றவற்றை கொஞ்ச நாள் ஓய்வு கொடுங்கள் .காவிரியும் தூத்துக்குடியும் நமது வாழ்வாதாரம்.இந்த போராட்டத்தின் வெற்றி என்பது இளைஞர்களின் தன்னம்பிக்கையில் தான் உள்ளது!முடிவெடுங்கள் என்று ட்வீட் செய்துள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full